பாலியல் வன்புணர்வுக்குள்ளான தலித் சிறுமியின் உடலை மேற்கு வங்க போலீசார் இழுத்து செல்வது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் கலியாகுஞ்சில் கடந்த எப்ரல் 19-ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்படும் தலித் சிறுமி (வய்து 17), கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில், சிறுமியின் உடலை மேற்கு வங்க போலீசார் இழுத்து செல்வது போன்ற அதிர்ச்சி அளிக்கக்கூடிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதை அடுத்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை அனுப்புவதாகக் கூறியுள்ளது.